Sunday, October 20, 2013

கனவில் பயணங்கள் - 2

உன்னைத் தேடிய பயணங்களில்
நான் மடிவதுவும்
நம் காதல் பிழைத்துக் கிடப்பதும்
நித்தியப் பிழையெனினும் நீட்டித்தே
கனவு பழகுகிறேன்
நெடும்பயணத்தின் முடிவில்
இறங்கிய பேரூந்தொன்றில்
பயணச்சுமைகளேதுமற்று
மனச்சுமை தாங்கி வருகிறேன்
புது நிலம்
புது மக்கள்
புது மொழி
தென்படும் முகங்களிலெல்லாம்
தமிழே இல்லை
விரல் பிணைத்து நடந்த பாதைகளையெல்லாம்
கால்கள் புலனாய்வு செய்கின்றன
தடங்கள் எதுவும் தென்படவேயில்லை
வீடு திரும்பலுக்கென அல்லாடும் மனதை
கூடலின் கனவுகளினுள் திருப்புகின்றேன்
கடக்கும் கண்களில் சில ஏதோவொரு கொடூரத்தின்
ஞாபகம் தெளித்து மறைகின்றன
சடாரென்று மழை வருகிறது
நிழற்குடையில்லா மண் சாலையில்
மரக்குடைக்கென ஒதுங்குகிறேன்
வெட்டும் மின்னலும் உறுமும் இடியும்
‘அர்ச்சுனா’வென்று சுவாதீனமற்று
மொழிகின்றன இதழ்கள்
சூத்திரங்களேதுமில்லா சுந்தரக் கனவு போல
சக்கராயுதமேந்தி அர்ச்சுன முகத்தோடு
வில்லம்பு சகிதம் அந்நியனொருவன்....
குழம்பிய மனம் தெளியுமுன்
கழுத்தை நெருங்குகிறது சக்கராயுதம்
பிழையென்ன செய்தேன் மாதவ அர்ச்சுனனே!
குரல்வளை வெட்டி பேச்சுத் திண்றுகிறேன்
பளீரிட்ட மின்னல் வாரிக் கொண்டு போகிறது
மின்வெட்டு விடியலில் அழுத்திய சங்கிலி
நான்குமுறை யோசித்தும்
ஒன்று மட்டும் விளங்கவில்லை
அர்ச்சுனன் ஏன் மாதவன் வேடமேற்று வந்தான்?

பயணம் தொடரும்....

2 comments:

Anonymous said...

romba arumaiya eluthi irukeenga..

DREAM CATCHER said...

1 + 1 = 1
" Spending time with someone should be enjoyable not an obligation."

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!