Monday, October 7, 2013

கெஞ்சலாய் கொஞ்சம்...

மதுக்குப்பிகளில்
அடைக்கப்பட்ட போதையை
தளும்பத் தளும்ப
குவளைகளில் நிரப்பிக் கொண்டிருக்கிறாய்
நுரை பொங்கி வழியுமதன்
நாற்றத்தினூடாக
சில வசவுகளும்...
சில விளக்கங்களும்...
சில கவிதைகளும்...
எவ்வுணர்வின் தளும்புதலுக்கான
மருந்தென மதுவைத் தேர்ந்தாயோ?!
அதெல்லாம் இருக்கட்டும்
போதையோடு போதனை
செய்வதையாவது நிறுத்திவிடேன் கொஞ்சம்...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!