Sunday, October 6, 2013

துறவி

சலனமுற்று நகரும் நதியுள் கால் நனைக்கிறேன்
என் வரவின் ஆச்சர்யங்களற்று
அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது
ஏதோ புரிந்தது
நனைந்த பாதங்களின் ஈரத்தை
காற்றும் வெயிலும் உறிஞ்சித் தீர்க்கின்றன
தனலா தண்மையா
எதற்குமசையாமல் நடக்கப் பழகுகிறேன்
துறவியென்பது செவிப்பறை சேர்கிறது
துள்ளியெழுந்து
மிகைப்புனைவை போர்த்திக் கொள்கிறேன்
நாணமும் பயிர்ப்பும்
அலங்காரமாய் ஒட்டிக் கொள்கின்றன
எவருமில்லை
நானே தான் இதற்கெல்லாம் காரணம்
இன்னமும் தீர்ந்திடாத இளமையோடெல்லாம்
துறவறம் பூணுதல் அத்தனை அழகல்ல

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!