Monday, September 15, 2014



இழப்பதற்கேதுமில்லையென்று
இறுமாப்பிலிருந்தேன்
இறந்துவிடென்றவன்
இம்சிக்கும் வரை......

***

இன்றழுத மழை
நாளைக்குள் உலர்ந்துவிடும்
முளைக்கும் காளான்களை
என்ன செய்ய ?

***
நிழலாட்டம் பார்க்கிறேன் 
இரண்டு தென்னை ஓலைகள் 
வாள் வீசிக் கொள்கின்றன 
மெல்ல மெல்ல 
வேகம் குறையும் காற்றில்
ஊடல் கூடலாகி...
தனித்த கூட்டில் கூவும் குயிலோடு
விரகம் பூசி வடிகிறது
கண்ணீர் அருவி

***

வைரக்கல்லுக்குள் சிறைபட்ட குமிழி
செதுக்கும் வரை காத்திருந்து 
சிதற்றிப் பெறுகிறததன் 
விடுதலையை....

***

நான்கைந்து பல்லவிகள்
எத்தனையோ சரணங்கள்
எழுதிக் களைத்து
எதுவும் பொருந்தாது
தனி லயத்தில் பயணிக்கும்
தாளத்துக்கு மௌனத்தை
துணையாக்கினேன்
இதுவே இனிதென்று
இசைந்து இளகுகிறதுன் இசை

***

காகிதங்களால் 
கட்டமைக்கப்பட்டது தான் 
இந்த வாழ்க்கை...

***

பிரபஞ்ச மித்தை
இக்காதல்
L

L
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!