Monday, October 7, 2013

மரம்வெட்டி வீரர்கள்

இங்கு நூறு மரங்களிருந்தன
இருபத்தோரு மனிதர்கள்
இறந்த வருத்தத்தில்
வெட்டி வீழ்த்திவிட்டார்கள்
மனிதர்களை வெட்ட முடியாத கோபமாம்
வாழைவெட்டி வாள்வீரர்களாயிருக்கும்
பக்கவேர் பிடித்து நூறிலிருந்து
ஆயிரமாய் பெருகிய
நாங்கள்
உங்களுள் யாரையும் வெட்ட விரும்பவில்லை
கனிதந்து நிழல் தந்து
பசுமை போர்த்தி
மன்னிக்கும் மரமாய் தான் இன்னமும்....
வெட்டிய நீங்கள் மட்டுமேன்
மீந்திருக்கும் மனிதமும் சரிந்து
மிருகமாய் மாறிப் போனீர்கள்?
திரிந்த உம் முகம் சரிசெய்வதற்குள்
இன்னபிற மனிதர்களுக்கு
தலையங்கம் தைக்கிறீர்களாமே!
மரங்கள் வெக்கித் திரும்பும்
மனித முகங்கள்
நிச்சயம் உங்களுடையதாய் தானிருக்கும்!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!