Friday, October 4, 2013

யாருக்கோ...

கதைகளேயில்லை என்னிடம்
தேடி வந்த நீங்கள்
அலுத்துக் கொள்கிறீர்கள்!
அன்றொரு நாள்
அதிகாலையில்
சாகசமும் போராட்டமும்
நிறைந்தவொரு கதைக்களத்தில்
உங்களுக்கொரு வாய்ப்பிருந்தது
கௌரவ வேடமோ
கதாநாயகனோடதோ...
பங்களிப்பைப் பொறுத்து உருமாறியிருக்கலாம்
நீங்களோ
அலைபேசியை அணைத்துவிட்டிருந்தீர்கள்
போகட்டும்
பெருமையாய் சொல்லிக் கொள்ள
எனக்கொரு
தோற்றுப் போன பாத்திரம் கிடைத்தது...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!