Monday, October 7, 2013

பயமுறுத்தல்

விட்டுப் பிரிவதையே
வேடிக்கையாய்
பயமுறுத்துகின்றனர்

நான் தனித்து நடந்தே
கால்கள் ஓய்ந்தவள்
மறந்தனர் போலும்

சலசலப்புக்கெல்லாம்
நடுங்குவதாய்
நடிக்கவே அலுப்பாயிருக்கிறது

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!