எழுதிப் போவென
அடம்பிடித்தே
ஆத்திரப்படுத்துகின்றன
அடங்காத வார்த்தைகள்
காந்தியோ
ஏசுவோ
புத்தனோ
இப்படியொரு உந்துதலிருக்கும் வரை
எவராயிருந்தாலும்
எழுதுவாராயிருக்கும்
தீவிர இலக்கியச் செங்கோல்
தரித்தபடி
கவி சொல்லக் கட்டளையிடுகிறான்
பரிமேலொருவன்
விலங்குகள் பூட்டி
பெண்ணெனப் பெயரிட்டபின்
புலம்பவும்
கொதிக்கவும்
அழுகவும் முடிகிறதேயொழிய
காத்திரமாய்
வார்த்தைகளை
எப்படி வரிசைப்படுத்துவது?
அடம்பிடித்தே
ஆத்திரப்படுத்துகின்றன
அடங்காத வார்த்தைகள்
காந்தியோ
ஏசுவோ
புத்தனோ
இப்படியொரு உந்துதலிருக்கும் வரை
எவராயிருந்தாலும்
எழுதுவாராயிருக்கும்
தீவிர இலக்கியச் செங்கோல்
தரித்தபடி
கவி சொல்லக் கட்டளையிடுகிறான்
பரிமேலொருவன்
விலங்குகள் பூட்டி
பெண்ணெனப் பெயரிட்டபின்
புலம்பவும்
கொதிக்கவும்
அழுகவும் முடிகிறதேயொழிய
காத்திரமாய்
வார்த்தைகளை
எப்படி வரிசைப்படுத்துவது?
No comments:
Post a Comment