Sunday, September 29, 2013

விலங்கு பூண்டிருக்கும் விலங்கு

வாதைகளோடு பிணைந்து கிடக்கிறது
வலிக்கும் நிதர்ச்சனங்கள்
சொற்களற்ற கையறு நிலையில்
என் கவிதையை
எனக்காக நானே எழுதமுடிவதில்லை
எனைக் கடக்குமெவரேனும்
பிரதிபலன் பாராது
கைவிலங்கை உடைத்துவிடுங்கள்
வாய்க்கட்டையும் பிய்த்தெறியுங்கள்
ஒடுக்கப்பட்ட வாழ்வியலை
பேசவேண்டியது
வரலாற்று அவசியமாகிறது

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

வரலாற்று அவசியமாகிறது

வரலாறு முக்கியம் அமைச்சரே....!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!