Monday, September 23, 2013

தீர்ந்து போன வார்த்தைகளோடு
மௌனம் பருகி விடைபெறுமிந்த
சம்பிரதாயங்கள் வேண்டாமே!
வலுவில் கூட்டிவரும் சிரிப்பும்
அருகிருந்தும் தூர நிற்பதுவும்
அவஸ்தையாய் இருக்கிறது
பிறர் பார்க்க
பிறர் ரசிக்க
பிறர் புகழ
பிறர் மகிழ
பிறருக்கென....
எத்தனை முறைதான்
கிழித்து ரணமாக்குவாய்
உன் காதல் சுமந்தெறிந்த மனதை....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!