Monday, September 23, 2013

இரு தெய்வங்கள் வரமருள்கின்றன

இடைக்கச்சையும் மார்புக்கச்சையும்
அவிழும் பேராபத்தில்
அதிரும் இசைக்கென ஆடிக்கொண்டிருக்கிறாள்
நர்த்தகி ஒருத்தி
வெளிச்சம் பாய்ச்சி வியாபாரமாக்கும்
உத்திகளிலிருக்கின்றன
பணம் தந்த மிருகங்கள்
இமைக்காமல் கண்கள் விரிய காத்துக்கொண்டிருக்கின்றன
பலகோடிக் கண்கள்
பதைபதைபுடன் செய்வதறியாது என்போல் சிலரும்....
குழுவிலிருக்கும் இன்னொருத்தனும் இன்னொருத்தியும்
திடுமென புகுத்திய நடன அசைவுகளில் ஆடை திருத்த அவகாசமளிக்கிறார்கள்
கைதட்டுங்கள்!
ஒரு மனுசிக்கு
இரு தெய்வங்கள் வரமருள்கின்றன

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!