Tuesday, September 17, 2013

பொய்

ஒன்றைச் சொல்லியும்
பிரிதொன்றை மறைத்தும்
பொய்யில் பூக்க வைக்கிறேன்
உனது புன்னகையை...
நிலா, முற்றத்து அண்டாவில்
மூழ்கிக் குளிக்கிறது என்பது போல
எண்ணற்ற பொய்கள்
நீ சிரித்தால் போதும்
பாவக் கணக்கை
பிறகு பார்த்துக் கொள்ளலாம்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!