Friday, July 5, 2013

ஞாபகக் கேணி

நாகரிக முகமூடிக் கழறும் கணம்
காம வெறிக் கண்களோடொரு
வன்பசி மிருகம்
வாரியணைக்கிறது
குறுவாளெடுத்து கொலைக்கென
ஆயத்தமாவதில்
மெல்லிய சிக்கல்
நானே உணவிட்டு வளர்த்த மிருகம்
பாசத்தில் குழைத்த
பதில்களும் அத்துப்படி
வார்த்தைகள் தின்றழித்த
நினைவுகளை
யாழினில் இசைக்கிறது
இனி நான் என் செய்வது?
செவி மறைத்து
ஊமையாகிறேன்
தூர்ந்து போகட்டும்
ஞாபகக் கேணி

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

அழகான வரிகள்..

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!