Thursday, July 4, 2013

கவிக் கோர்வை - 17

*

யாரோ மனம் தட்டும் போது தான் மாமா
நீ இன்னும் உள்ளிருப்பது தெரிகிறது
உயிரில் கலப்பதென்பதை
நேற்று வரை நம்ப வில்லை
நீ
கலந்திருக்கிறாய்
காதலாய்...

*

கோடிச் சொல்லில்
ஒற்றைச் சொல்லேனும்
உனக்காய்
உனக்கெனவே
உன்னால்
உருக் கொண்டெழுகிறது

*

அறுந்த நரம்பெனச் சொல்கிறார்கள்
அது இசைத்த ராகங்களை
நினைவில் மீட்டுகிறேன் யான்
உயிரோடில்லையா
நீ
உன்னை சுவாசித்தே
வாழ்கிறேனே நான்

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!