Sunday, July 14, 2013

விக்கல்

உச்சந்தலையின் மயிரெடுத்து
சுண்டி விடுகிறாள்
கத்தியெடுத்து கழுத்தில் வைக்கிறாள்
சத்தமாய் அதட்டுகிறாள்
தண்ணீர் தருகிறாள்
தலையை நிமிர்த்தி
அண்ணாந்து பார்க்கப் பணிக்கிறாள்
அறுபது நொடி
அவஸ்தைக்குப் பின்
ஆசுவாசமாய் அடங்கிப் போகிறது
விக்கல்
பார்வை தெளிய
அவளைப் பார்க்கிறேன்
தளும்பிய கண்ணோடு
இன்னும் என்னையே பார்த்துக் கொண்டு ...
சீண்டாமல் கிடக்கிறது
தட்டில் பரிமாறிய உணவு

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!