Tuesday, July 2, 2013

கவிக் கோர்வை - 14

*

பற்றிக் கொண்ட சூளைக்குள்
பச்சை மரமும் பஸ்பமாகும்
மழை நனைத்தும்
தணல் சுட்டதைச் சொல்லும்
வெந்த செங்கல்

*

படித்துறை ஓரத்தில் தான்
கால் நனைத்து
ஆழம் பார்க்கிறேன்
கிழிந்து பின் சேர்க்கிறது
ஓடும் நதி

*

சிதறிய சொந்தங்களைப் பார்த்தழுகிறது
செதுக்கப்பட்டச் சிலை
அச்சிலை தொட்ட அபிஷேகத் துளியை
தானுறிஞ்சி சிலிர்ப்படைகிறது
பொடிந்து பட்ட மணற்துகள்

*



No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!