Thursday, July 11, 2013

யாரோ எவரோ...

அவரோ எவரோ
எனக்கு
என்னைத் தவிர்த்து
யாவரும்
யாரோ எவரோ...
சினேகப் புன்னகைக்கு
பதிலாய் ஒரு புன்னகை
சிந்திய தமிழுக்கு
பதிலாய் ஒரு நன்றி
உறக்கம் சிறைபிடிக்கும் வரை
படிக்கத் தமிழ்ப் பாட்டு
உடலரசியலிலும்
உள்ளம் கலப்பதில்லை
உன் அரசியலொரு பொருட்டா
மறந்தே போனதுன் பெயர்
நாளை உன் நிழலும்...
மன்னிக்க
சாபமான நினைவுகளிருக்கிறதொரு கோடி
உன்னையுமா சுமக்கவேணும்...
விட்டுப் பற
உரசாமல் விலகிப் பற
சிறகுகள் தவிர்த்து நமக்குள்
யாதொரு ஒருமித்தலுமில்லை ...
இயல்பே அன்பெனினும்
எனக்கு
என்னைத் தவிர்த்து
யாவரும்
யாரோ எவரோ...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!