Monday, July 1, 2013

கவிக் கோர்வை - 13

*

தன்னை மறைக்கும் கையையும்
பிரதிபலிக்கிறது
கண்ணாடி

*

ஈசலின் சிறகுகள் எனது
நகங்களால் கிழித்துவிடாதே
நாழிகைகள்
வேகமாய் நகர்கின்றன


*


மோட்சத்துக்கும்
பாம்பின் விசத்துக்குமிடையே
அல்லாடிக் கொண்டிருக்கிறேன்
மெதுவாய் சிதறுகிறது சோழி
ஜோடியாய் சிரிக்கப் பணிக்கிறாள்
எப்போதும் தாயம் வேண்டுபவள்

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!