Tuesday, June 18, 2013

கவிக் கோர்வை -09

*

எண்வகைக் கைகளில்லை
ஒளிவட்டங்களில்லை
சொல்லியும் திரிவதில்லை
ஆனாலும் நினைவில் கொள்க
நானோர்
சக்தியின் அம்சம்

*

நிழலோடு பேசுமவனை
பைத்தியமென்கிறார்கள்
தினமும்
நம்மோடு நாம்
பேசிக் கொள்வதில்லையா
என்ன?

*

இமை முடி உறுத்தலுக்கும்
கலங்கும் கண்கள்
இதயத்தின் நரம்பதிர்தலுக்கு
விசும்பாதா என்ன?

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!