Monday, June 24, 2013

கவிக் கோர்வை - 12

*

அகில் புகையில்
மயங்கி ஒடுங்குகிறது
வெற்றிவேர்
தணலின் வாட்டத்தில்
சுழலும் சுருளது
மூர்ச்சித்தவனின் சுவாசம்
கலக்கிறது
வேர் மடிந்ததும்
அவன் எழுந்ததும்
ஒரே கணத்தில்...
உச்சாடனங்கள் ஓங்கியதிர
கனவு கலைகிறது

*

காற்றில் பறந்தபடி இருக்கட்டும்
அந்தச் சிறகு
சாதி பகுத்த மண் வேண்டாம்

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!