Wednesday, June 19, 2013

கவிக் கோர்வை -10

*

என்னவென்றே தெரியாது
கேட்ட மாத்திரத்தில்
வசப்பட்டுப் போகிறேன்
சர்வ வல்லமையின்
சரியான பிரதிநிதி
இசை தான்

*

நானொரு காலப்பறவை
குளிர்காலங்களில்
உறங்கிக் களிக்கிறேன்

*

கூடடையும் அவசரத்தில்
மேகப் பறவைகள்
மழை பொழியும் இந்நேரத்தில்
எந்தக் குடைக்குள்ளேனும்
ஒதுங்கியிருக்கக்கூடும்

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!