Monday, June 10, 2013

பிம்பம்

அசைந்தபடியிருக்கிறது
ஒளி பிம்பமொன்று
இருட்டில் கவனிக்கிறேன்
இல்லாத பயமொன்று பீடிக்கிறது
அமானுஷ்யங்களைப் பொருத்தி
அல்லல் படுத்துகிறது
அறிவீனம்
மெல்ல நடுங்குகிறேன்
குளிரூட்டப்பட்ட அறையிலும்
வியர்த்துக் கொட்டுகிறது
பயம் பழகியபின்
பகுத்தறியும் மூளையும்
கண்மூடி ஆராய்கிறது
மூலமெதுவென்று
நீண்ட மௌனத்திற்குப் பின்
கண்டுவிட்டேன் காரணத்தை...
தெரு விளக்கொளி தான்
அசையும் ஆடியிலகப்பட்டு
 பிரதிபலிக்கிறது
அலைவுறும் கற்றை
இப்போதொரு தேர்ந்த நடனத்தை
அரங்கேற்றுகிறது
கால்களையும் கைகளையும்
உருவகித்தது போலவே
அசைபவற்றுள் ஆணையும் பெண்ணையும்
பொருத்திப் பார்க்கிறேன்
கனவோ கற்பனையோ 
தூங்கிப் போகிறேன் நினைவுகளில் ....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!