Thursday, June 20, 2013

கவிக் கோர்வை -11

*

பேரூந்து கூட்டத்தில்
மடியேறும் குழந்தையொன்று
தாயென்றெண்ணி
என் முலைபற்றி பதற வைக்கிறது
கருவைச் சுமந்தறியாக் கருப்பை
தன்னையே சபித்தழுகிறது
வேதியல் மாற்றத்தில்
காம்பு வரை திரளும் ஏதோவொன்று
கண்ணீராய் தளும்பி நிற்கிறது

*

அறைந்து சாத்துகிறேன்
படுக்கையறைக் கதவை...
முழுதும் தாழிட்டுக் கொள்ளாமல்
ஒருக்களித்தபடி அசைகிறது
பருத்தும் மெலிந்தும்
எட்டி எட்டிப் பார்க்கிறது
வெளிச்சம்
கதறியழுகிறேன்
காயப்படுத்தியவர்கள் எவரோ
அறைக்கு வெளியே
கைபிசைந்தபடி கண்ணீரோடு
நிற்கிறாள் அம்மா

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!