Friday, December 7, 2012

சேரிகள் ஒளிபெறட்டும்

வீணையின் நாதம் 
எப்போதும் 
அரற்றும் வயிற்றோடு 
நின்று ஜெயிப்பதில்லை
ஆம்! 
பசியில் செவியுணர்வதில்லை 

சோதியா ஜோதியா 
என்பதிலெல்லாம் 
பெரிதாயென்ன வந்துவிடப்போகிறது 

அன்றாடத் தேவைகள் 
அவர் வரைவில் 
உழைப்பிற்குத் தக்க கூலியும் 
மங்கும் பார்வைக்கு 
ஒரு கைப்பிடிச் சோறும் 
பலகோடி ஒளிவெள்ளம் 
இருண்டு விட்ட குடிசைக்குள் 

சேரிகள் ஒளிபெறட்டும் முதலில் 
அதன்பின் 
கொண்டாடிக் கொள்ளுங்கள் 
அந்நிய முதலீட்டுக்கு 
அரசாங்கத் திருவிழா!

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்.

கவியாழி said...

முதல்ல தெருவிளக்கை போட சொல்லுங்க

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!