Friday, December 7, 2012

பசித்தவர்க்கு தன்னலமென்பது யாதெனில்....


பறந்து கொண்டிருக்கிறதோர்
தாய்ப்பறவை
விரலிடுக்கில் வேட்டைப்பொருள்...
அம்மாவுக்குக் காத்திருக்கும்
அன்றுதித்த பச்சிளம் பறவைகளோடு
விரிந்து தான் கிடக்கிறது
வழிநெடுகிலும்
அதன் கூட்டைப் போல்
ஆயிரம் கூடுகள்...
நொறுங்கிய ஓட்டில்
சிக்கிக் கொண்ட மெல்லிறகை
மீட்கும் பிரயத்னங்களிலிருக்கும்
தன் குஞ்சைப் பார்த்ததும்
பரபரப்போடு கூடடைகிறது அப்பறவை!
அலகால் சிக்கெடுத்து
வாய் பிளக்கும் அத்தனைக்கும்
உணவூட்டுமதற்கு
எப்போதும் நினைவில்லை
பசியோடிருக்கும் பக்கத்துக்கூடு!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!