Monday, December 3, 2012

நோய்க்கூறு#4

விம்மலுக்கு நடுவே 
கண்கள் சிவக்க 
கேவலும் புலம்பலுமாய் 
விரலின் தடம்பதிந்தக் கன்னத்தில் 
கோடுகோடாய் ஈரக்கோடுகள் 
சல்லடைக் துளைகளில் 
வழிந்த நேசமும் 
அப்படியும் ஏதாவது 
மீண்டதா என்கிற பரிதவிப்பும் 
ஒரு நீண்ட நெடுங்கதை... 
விழியெதிரே நடந்தேறியும்
நிகழ்வில்
அவர்தம் உலகமென்று
தேங்கிய சாலைநீர்
புடவை படாமல்
பாதுகாப்புணர்வோடு விலகிப்போகமுடிகிறது...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!