Friday, December 7, 2012

கூசிப் போகும் என்னுடல்...

மீன் தொட்டி மீன்களிடம் நேசம் வைக்கிறேன் 
பூந்தொட்டியில் தோட்டம் வளர்க்கிறேன் 
படிப்பதெல்லாம் சோசலிசம் 
வாழ்வதென்னவோ அடிமை வாழ்க்கை 
சில நேரம் சீறியெழுகிறேன் 
சில நேரம் முகம் மூடி அழுகிறேன் 
சிலருக்கு மகுடியும் 
சிலருக்கு வீணையும் 
எப்போதும் உண்மையுரைக்கப் பறையோடும் 
பல்முக வித்தகனாய் 
எண்ணத்தின் வீச்சுக்களுக்கேற்ப....

சாத்தானாக வாழ்கிறேன்
கடவுளைச் சபிக்கிறேன்
மனிதர்களுக்குப் பயப்படுகிறேன்

நான் யாரென்கிற தெளிவிற்கு
நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை

எல்லா நேரத்திலும்
எனக்குப் பிடித்தமான நான்
என்பதே என் வரைவு

என் ரகசியங்கள் அமிழ்ந்து நின்ற கிணறுகள்
கடலோடு கலந்த அந்த நிமிடத்திலும்
போட்டு வைத்த கல்லில் எத்தனை சேதமென்று
கணக்கிடவில்லை
தேர்ந்தயிடம் தவறென்று மு்றையிடாது
சிரித்தபடி நகர்ந்தேன்

இப்போதும் இப்படித் தான்

பைத்தியமென்றும்
பிச்சியென்றும்
சொல்லாமல்
மனுசியென்று சொன்னால்
கூசிப் போகும் என்னுடல்...

சாத்தானாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்!

4 comments:

semmalai akash said...

பைத்தியமென்றும்
பிச்சியென்றும்
சொல்லாமல்
மனுசியென்று சொன்னால்
கூசிப் போகும் என்னுடல்...

அற்புதமான வரிகள் ரசித்தேன்.

கவியாழி said...

பைத்தியமென்றும்
பிச்சியென்றும்
சொல்லாமல்
மனுசியென்று சொன்னால்
கூசிப் போகும் என்னுடல்...//
நல்ல வரிகள் கவிதை மட்டும் நன்று உங்களது கதையல்ல

revathi said...

//sathanagavae irunthu vittu pogiren// - Ennai kannadiyil paarpathu ponru irunthathu....

revathi said...

//Sathanagavae irunthu vittu pogiraen// - Ennai kannadiyil paarpathu ponru irunthathu... ungal vargalin prathibalippu...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!