Saturday, December 8, 2012

பாமர பக்தி -05


கடவுளானபின்
காதல் கொள்வேனோ
என்னவோ
இப்போதைக்கு
சன்னலோர இருக்கையில் நான்
பக்கத்தில் நீ
எந்த திருப்பத்திலும்
சாத்தானாக மாறக்கூடும்
அபாயத்தில் நான்
எதற்கும் எச்சரிக்கையாயிரு!
தளரும் என்னைத் தாங்கிப் பிடிக்கையில்
எங்கேனும் கூர்நகம் பட்டவை
ஏதோவொரு மதத்தின்
சின்னமாய் உருமாறலாம்
பக்தியின் புரிதல் அப்படி...


No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!