Wednesday, December 5, 2012

சொல்


எதை நோக்கிச் செலுத்தப்பட்டது
அந்தச் சொல்
உலுக்கியெடுக்கும் பிரளயங்கள்
உள்ளடக்கி
எய்யப்பட்டச் சொல்லம்பு
ஆட்டம் கண்டதென் அஸ்திவாரம்
பாவங்கள் பாவனைகளற்ற
ஆழ்மனப் பரிதவிப்போடு
பரிமாறப்பட்டதென் இலையில்...
ஆயிரம் சொல்தாங்கி
அபூர்வ சிந்தாமணி நான்
வலு பொருந்திய பதமதன்
கணம் பொறுக்காது
கலங்கி வழிகிறது கண்ணீர்
நெஞ்சமெங்கும் ஆர்ப்பரித்து
ஓடுகிறாய்
இதயத்தின் குறுக்குவாட்டு நரம்பில்
பிணைக்கப்பட்டிருக்கிறது
நின் அசுவத்தின் கடிவாளம்
அலைவுகளுக்கெல்லாம் புத்தம்புதிதாய்
வலியோடான மென்னதிர்வுகள்
தம்புராவின் மீட்டலையொத்து..
சிந்திக்கொண்டிருக்கிறது
பேரிசைச்
சொட்டுச் சொட்டாய்

1 comment:

semmalai akash said...

அருமையான வரிகள் ரசித்துப் படித்தேன்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!