Sunday, March 15, 2009

விதிவிலக்கு

வண்ணத்து பூச்சி !
கூட்டுப் புழுவின்
பொறுமை.....
பரிணமிக்கும் வரை
எல்லா உயிருக்கும்
காத்திருத்தல்
சாத்தியம்
இயற்கையில் ....

ஆனால் மானுடம்
மட்டும்
விதிவிலக்காய்!!!

தூசு படுமுன்
இமை காக்கிறது
கண்மணியை ...

அனிச்சையாய்
எழும்பும்
தற்காப்பு கூட
ஏன்
எழுவதில்லை
இதயம் களவு போகயில்...





2 comments:

பழமைபேசி said...

போகையில்...

கயல் said...

நல்ல தமிழோடு பேச்சு வழக்கு தமிழையும் கலந்தா எப்படி இருக்கும்? ஒரு சின்ன முயற்சி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!