Monday, March 23, 2009

"இரண்டாம் உயிர்"

துப்பாக்கி முனையில்
என் குடும்ப‌ம் ....
ம‌ர‌ண‌ம் பெரிதா?
மான‌ம் பெரிதா?
த‌ன்னை த‌ந்து - எம்மை
காத்தாள் என் ச‌கோதரி!!
அந்நிய‌ன் தீண்டிய‌ தேக‌ம்
துற‌ந்து ஆவியானாள்‍-அந்த‌
தன்மான‌ த‌மிழ‌ச்சி !!
எங்க‌ள் தேச‌த்தில்
எதுவும் நிலையில்லை
சுவாச‌ம் உட்ப‌ட‌....
சூறையாட‌ப்ப‌டுவ‌து
உட‌மைக‌ள் ம‌ட்டும‌ல்ல‌
எங்க‌ள் பெண்டுக‌ளும் தான்...
ஒவ்வொரு முறையும்
கண்ணீர் ம‌ட்டுமே
சாத்திய‌மாகிற‌து ‍‍
என் சித‌றிய‌ குடும்ப‌த்தை
நினைக்கை‌யில்....
இன்றா? நாளையா?
என் மக்கள்
வாழும் நாள் யாவும்
மரண பயத்தில் ...
அந்நிய‌ தேச‌த்தில் அக‌தியாய்
இனமானம் காக்க
‍அவ‌ள் த‌ந்த 'இர‌ண்டாம் உயிர்' ....

4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சோகச் சுவடுகளில்
உண்மை பதிக்கப் பட்டிருக்கிறது!
கனக்கச் செய்கிறது!!

கயல் said...

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி!

பழமைபேசி said...

நன்று!

ப்ரியமுடன் வசந்த் said...

:(

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!