Saturday, March 21, 2009

நீ- நான் -அவர்

எத்தனை முறை
முயன்றாலும் முடியவில்லை
நானும் நீயும்
பழகிய நாட்களை
நினைவு படுத்தும்
வடுக்களின் ஸ்பரிசத்தை....

அது போலவே....

எத்தனை முயன்றும்
முடியவில்லை
என் தந்தையின்
வேண்டுகோளை
மறுத்துரைக்க...

நீ- நான் என்பது
சுகமே - ஆனாலும்
நான் அவருக்கு சுவாசம் 

தனித்துவம் அணிகலன் ஆணுக்கு
மறுக்கவில்லை நான் - ஆனால் நீ
எடுத்ததெற்கெல்லாம் முரணாய் ...
எல்லாவற்றிலும் சமூகத்தோடு
இணைகோடாய்
இணைய மறுக்கிறாய்!

தலைமுறை இடைவெளி
இடையில் நான்
இரு தலைக்கொல்லி எறும்பாய்.....


நீயா? அவரா?
மனம் கேட்கும்
கேள்விக்கு பதில்
தேடித் தேடி
விடிகிறது என் இரவுகள்
உறக்கமின்றி....

3 comments:

கருணாகார்த்திகேயன் said...

நல்ல பதிவு
அன்புடன்
கருணா கார்த்திகேயன்

பழமைபேசி said...

ஆகா...

ப்ரியமுடன் வசந்த் said...

பாவம்தான் அப்பா...!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!