Sunday, March 8, 2009

எனது பதிவுகள்

மரங்களின் மரணம் விறகாய்
இலைக‌ளின் ம‌ர‌ண‌ம் ச‌ருகாய்
மலர்களின் மரணம்
வாசனை திரவியமாய்

இயற்கையில்
மரணத்திற்குப் பின்
முழுதும் அழிவ‌தில்லை
தொட‌ரும் ப‌ய‌ண‌ம்
பிற‌ர்க்கு ப‌ய‌னாய்

வாழும் நாளில்
சில நிமிடமேனும்
பிறர்க்கு பயனாய்
வாழும் முயற்சியில்....

எனது பதிவுகள்

3 comments:

பழமைபேசி said...

வாங்க வாங்க...

எனது மறுமொழிகள்!

மரங்களின் அர்ப்பணம் விறகாய்!
இலைக‌ளின் மறைவு ச‌ருகாய்!!
மலர்களின் ஈதல்
வாசனைத் திரவியமாய்!!!

இயற்கையில்
மரணத்திற்குப் பின்
முழுதும் அழிவ‌தில்லை,
பிற‌ர்க்கு ப‌ய‌னாய்
தொட‌ரும் ப‌ய‌ண‌ம்!

வாழும் நாளில்
சில மணித்துளிகளேனும்
பிறர்க்கு பயனாய்
வாழும் முயற்சியில்....

எனது மறுமொழிகள்!!!

பழமைபேசி said...

//நிஜ‌மான‌ சிரிப்பு//

யதார்த்தச் சிரிப்பு

//கருத்தால் க‌வ‌ரும் இனிய‌ சினேகிதி! //

வாழ்த்துகள்!

கயல் said...

நன்றி பழமைபேசி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!