Sunday, March 15, 2009

நெடிய‌தொரு ப‌ய‌ண‌ம்

வ‌ர‌வாய் ப‌ல உற‌வுக‌ள்!
செல‌வாய் சில‌ பிரிவுகள்!
ஈர‌மான‌ சில‌ நிக‌ழ்வுக‌ள்!
த‌னியாய்
வ‌லி சும‌ந்த‌ வ‌டுக்க‌ள்!

வானிலை மாற்ற‌ங்க‌ள்
போல்
வாழ்க்கை மாற்ற‌ங்க‌ள்!

இருப்பினும்...
நெஞ்சில் பார‌மாய்
இன்னும் இன்னும்....

வார்த்தையில்
தெளிவிக்க‌ முடியாத‌
ப‌திவுக‌ள்...

வ‌ண்ண‌த்துப் பூச்சி வ‌ருடிய‌ நிமிடத்தில்
என்னுள் வரைந்த‌ மவுன‌ ஓவிய‌மாய்
துளிர்த்து ம‌டிந்த‌
நம் காத‌ல்...

உன்னாலான‌ காய‌ங்க‌ள் வ‌லியெனினும் .....
அந்த ஒற்றை வழி பாதையில் - நீ
கூட‌ வ‌ந்த‌ சில‌ நாள்
ஞாப‌க‌ம்.....
அதுபோதும்
என் ப‌யண‌ம்
மேலும் தொடர ...

ஆயினும், நீ
என் கால ச‌க்க‌ர‌த்தின்
க‌ழ‌ன்ற‌ அச்சாணி!!
உனக்கு நான்
கிழித்து எறிந்த
நேற்றைய‌
நாட்குறிப்பு!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!