Monday, March 23, 2009

"முதிர் கன்னிகள்"

விடியாத இரவுகள்
அணையாத தாபங்கள்
மீளாத ஆசைகள்
புரியாத எதிர்காலம்
வாழ்க்கை முழுதும்
முற்று பெறாத
ஏக்க பெயரெச்சங்கள் .....
ஆயினும்
உறவுகளுக்காய்
மரத்துப் போன மனதுடன்
வாழ்க்கைப் பேரூந்தில்
"முதிர் கன்னிகள்"
சாத‌னைப் பெண்க‌ளாய்....

3 comments:

தென்னவன். said...

எல்லோர் வாழ்விலும்
ஏக்கங்கள் மட்டுமே
எச்சங்களாய்
எஞ்சி நிற்பதில்லை

நம்பிக்கை என்றொரு
நாள்மீன்
நெஞ்சிலே
நீங்காதிருந்தால்

வெற்றிகள் என்றும்
விலகுவதில்லை.



நன்றி
தென்னவன் ராமலிங்கம்

கயல் said...

தொக்கி நிற்கும் ஏக்க‌ங்க‌ள் ,
வெற்றிக்கு பின்னும் இருப்ப‌துண்டு....
ப‌ற்றுக் கொடியில்லா வாழ்வில் எச்ச‌மாய் ஏக்க‌ங்க‌ள் ம‌ட்டும் நிர‌ந்த‌ர‌மாய்...

வ‌ருகைக்கும் ப‌திவுக்கும் ந‌ன்றி! மீண்டும் வ‌ருக‌!

ப்ரியமுடன் வசந்த் said...

//ப‌ற்றுக் கொடியில்லா வாழ்வில் எச்ச‌மாய் ஏக்க‌ங்க‌ள் ம‌ட்டும் நிர‌ந்த‌ர‌மாய்... //

claps...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!