Saturday, January 5, 2013

கடைசிப் பூ


கைவிளக்கின்
விரிசோதி விழுங்கும் இருள்
அரவத்தின் வாயகப்பட்ட
அரைப் புத்தி மண்டூகம்
முன்னதன் ஒளிபட்டு
மீண்ட மாத்திரத்தில்
பின்னதன் ஒலி
செரித்தே போனது
தடயங்களேதுமின்றி...
வெளிச்சம் தொட்ட கணத்தில்
காக்கும் கரமென்று
நம்பிக்கை பூத்திருக்குமோ?

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!