Saturday, January 5, 2013

அஞ்சலி

பசியோடிருக்கும் சிங்கத்தின் கர்ஜனையோடு
சாதகங்களில் மெருகேறியிருக்கும் என்குரல்
இரண்டும் சேர்ந்ததொரு இசைக்கோர்வை 
இவ்வருடத்திய வெளியீடு 
கேட்ட மாத்திரத்தில் 
மக்கள் விக்கித்துப் போகட்டும் 
ஆம்! நானொரு இசைக்கலைஞன் 
துதிக்க மட்டுமே பழகியவையென் 
மென்கரங்களென்பதால் 
கூண்டுக்குள் முதலில் 
சேடிப் பெண்ணை அனுப்புகிறேன் 

பசியடங்கி உறுமலுடன் 
பிடறி சிலிர்க்குமதன் 
சீற்றங்களேயென் தேவை 

கனவுகள் மெய்ப்படின் 
மூகாம்பிகைக்கொரு வெள்ளி கிரீடம் 
அந்த ஏழைப்பெண்ணுக்கு 
ஒற்றை வார்த்தையில் அஞ்சலி  

சற்றுப் பொறுங்கள் 
வாயகப்பட்ட பிணத்தை 
சிங்கம் தின்று செரிக்கட்டும்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!