Saturday, January 5, 2013

நகர்ந்தபடியிரு


அடுத்தவர் பார்வை தொட்டால்
முடங்கிப் போகும்
நத்தையாயிராதே!
என்றேனுமொரு நாள்
உயிரற்றதென்று
ஓட்டோடு சேர்த்து
உயிரும் நசுக்கப்படலாம்
நகர்ந்தபடியிரு!

நீ செல்லும் பாதையில்
ஈரமுலரும் போது
புது மழை வரும் 

நகர்ந்தபடியிரு!

1 comment:

கவியாழி said...

அருமை,மனதிலும் ஈரம் வேண்டும்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!