Tuesday, May 21, 2013

வனம் பூசும் நெடுங்கனவு

தோகை விசிறி
உறங்கச் செய்கின்றன
சாகுந்தலங்கள்
தாலாட்டாய் குயில்
தமிழ்பண் கிள்ளைகள்
மின்மினியாய் விண்மீன்கள்
புல் விரித்த படுக்கை
சுவரற்ற அகன்ற வெளி
நேரம் பொறுத்து
தென்றலும்....
கற்றை மலர்  நகைப்பில்
வனம் பூசும்
நெடுங்கனவு....
விலங்கொன்றும்  இடறவில்லையே
ஏன்?

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!