Monday, May 20, 2013


இத்தனை வயசாகியும்
அம்முச்சி மடியில் படுத்தவுடன்
குழந்தையாகி விட முடிகிறது
அவளும் தான்
தலைகோதி நெற்றி வருடுகையில்
துளிர்க்கும் கண்ணீர் துடைத்து
என்னைக் குழந்தையாக்கி விடுகிறாள்
எப்போதாவது கேட்டிருகேனா
அவளும் பேத்தியாக ஆசைப்படுவதை
குழந்தையாக முயற்சிப்பதை....
அன்புக்கும் ஏங்குதல் மிகப்பெரும் சுயநலம்
அன்பைத் தரப்பணித்தல் சர்வாதிகாரம்
அன்பை அவர் அறியாமல் கொடுக்கும் போதே
அழகாகிறது உறவு
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!