Saturday, May 18, 2013

அவதானிப்பு

முகத்தில் புன்னகை தவழ
நகரும் பலகையில்
சூம்பிய கால்களுடன்
கைகளால் நகர்ந்து போகிறான்
சகோதரனொருவன்

நகராத வாகன நெரிசலில்
குளிரூட்டப்பட்ட மகிழூந்தில்
எரிச்சலில் தகிக்கிறான்
தனக்காரனொருவன்

மலரைவிடவும்
மலர்ந்து சிரிக்கிறாள்
பூக்காரப் பாட்டி

சந்தனம் பூசிய நெற்றியில்
சாந்தம் துளியுமில்லை
இயந்திர கதியில் அர்ச்சிக்கிறார்
கோவில் குருக்கள்

பாரதியைப் பாடிக்கொண்டு
மனதுக்குள் விசிலடித்தபடி
சாலை கடக்கிறேன்

சின்னச் சின்ன மாற்றங்களோடு
ஆயிரம் அவதானிப்புகளை உள்ளடக்கி
நிதமும் என்னோடே கடக்கிறது
இளங்காலைப் பொழுதுகள்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!