Monday, May 13, 2013

எவருக்குமானதல்ல

எவருக்குமானதல்ல
எனது பதில்கள்
எவரும் கேட்பதில்லை
என்னிடம் கேள்விகள்
எவருக்கும் புரிய வைக்க வேண்டியதில்லை
என் நட்பை இழத்ததற்காய் ஏங்கிச் சாவோர்
எண்ணிக்கையில் பூஜ்யம்
என்ன தான் காரணம்
எது தான் அழுத்திச் செல்கிறது
கட்டாயத்தில் மொழியப்படுவதல்ல
தன்னிலை விளக்கங்கள்
கடமையாய் சொல்லித் திரிவதில்
சுயத்தின் மீது படியப்போகும்
அழுக்குகள் கழுவப்படுமென்றா?
இப்படிப் பிதற்றித் திரியவதன் காரணம்
சொற்ப வார்த்தைகளில் சொல்லிவிடலாம்
நச்சரிக்கும் மனசாட்சி
நடுக்கும் தனிமை
நாதியில்லா நகர வாழ்க்கை
நீண்ட இரவுகளின்
நிமிடங்கள் கரைந்தும்
நித்திரைக்குப் போராடும்
நீலநயனங்கள்

1 comment:

Unknown said...

அருமையான பதிவுகள்!!!!!
சண்முகசுந்தரம்
பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!