Tuesday, May 14, 2013

அவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்

அவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்
கூச்சத்தில் நெளிந்தாலும்
அவஸ்தயாய் கையமர்த்தினாலும்
ஓய்ந்தபாடில்லை

அவர்களின் முகஸ்துதிகள் முட்கிரீடம்
சிரசேறும் உன்னதப் பொழுதில்
ஏதோ நெருடுகிறது

நீண்ட உரைக்கு முத்தாய்ப்பாய்
வெக்கத்தோடானவொரு போலிச் சிரிப்பு
என்னாலான பங்களிப்பு
என்னையும் நடிக்க வைத்துவிடுகிறார்கள்

ஆமோதிப்புகள் அறை நிறைக்கையில்
அல்லையதிர பெரும் அலை
மாயையைச் சுருட்டிக் கொண்டோடுகிறது

அவர்கள் என்னை அதிகம் புகழ்கிறார்கள்
அதனாலே எனக்கு அதிகம் பயமாயிருக்கிறது

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!