Sunday, January 31, 2010

நீலக் கருவிழிக்கப்பால் ....






உயர் நட்சத்திர கேளிக்கை கூடம்
திருமண வரவேற்புடன்
கூடிய கொண்டாட்டம் வேறு!
ஒப்பாத சூழல்
ஓரமாய் நின்று நோக்கலானேன்!

ப‌கலா? இர‌வா?
குழம்பித் தெளியுமுன்
சரவெடி சிதறலாய்
இசை அதிர்வுக‌ள்!
சில‌ வ‌கை அல‌ற‌லாய்...

கேளிக்கை விருந்தில்
மேலும் குதுக‌ல‌ம் கூட்ட
ஒப்ப‌ந்த‌ ந‌டிகையொருத்தி!

அலட்சிய புன்னகையுடன்
அனாயசமாய் அபிநயங்களை
அள்ளித் தெளித்தபடி...

இளசுகளின் மகிழ்ச்சிக்கு
சொல்ல‌வா வேணும்?

அரைமணி ஒருமணி
நேரம் ஆக ஆக மனிதம்
தொலைந்து மிருகம் நுழைய‌
இலைம‌றை காயாக
இருக்க‌ வேண்டிய‌து
கட்டவிழ்ந்து
கண்ணியம் மீறியது!
உள்ளே சென்ற
வ‌ஸ்துவின் ப‌ல‌னாய்....

இதுவரை கண்களால் மட்டும்
களவாடப்பட்ட அவளின்
அங்க லாவண்யங்கள்
கைகளாலும் சிறை பிடிக்கப்படும்
அவ‌ல‌ நிலையில்....

வேதனையின் சாயல்
வெளிப்படையாய் தெரிந்தாலும்
ஒப்பந்தத்தின் பேரில்
இயந்திரமாய் இசைக்கு
இயங்கிக் கொண்டிருந்தாள்.

அந்த‌ நீல‌க்கருவிழிக்க‌ப்பால்
ஏதேனும் அவ‌ல‌ம் இருக்குமோ?
எந்த‌ க‌ட்டாய‌ம் அவ‌ளை
இவ்வித‌ம் செய்த‌து?
அவளுக்கு இதுபோலும்
எத்த‌னை சோத‌னையோ
இன்றைக்கு?
ஒருவேளை அவ‌ள்
கண்களால் அழைப்ப‌து
கிருஷ்ண‌ ப‌ர‌மாத்மாவையோ?

முக‌ச்சுளிப்புட‌ன் அவ‌ஸ்தையாய்
உண‌ருகையில்
ப‌ரிச‌ளிப்பு ப‌ட‌லம் தொட‌ங்கிற்று
அப்பாடா!
இதுவ‌ரை கையில் க‌ன‌த்த‌தை
த‌ந்துவிட்டு ம‌ன‌த்தில்
ஏறிய‌ பாரத்தை
என்ன‌ செய்வ‌து
என்கிற‌ கேள்வியுட‌ன்....


10 comments:

பழமைபேசி said...

மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்....

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு

கலகலப்ரியா said...

ம்ம்... அது வேறு உலகம்... :)... ரொம்ப யோசனை எல்லாம் வரப்டாத்.... =)).. ஆனாலும் யோசனை ரொம்ப நல்லாருக்கு...

கயல் said...

//
பழமைபேசி said...

மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்....
//

ம்ம்! அப்படித் தான் இருக்கனும்! நன்றி ஆசானே!

கயல் said...

//
ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு
//

நன்றி ஐயா! அடிக்கடி வாங்க!

கயல் said...

//

கலகலப்ரியா said...

ம்ம்... அது வேறு உலகம்... :)... ரொம்ப யோசனை எல்லாம் வரப்டாத்.... =)).. ஆனாலும் யோசனை ரொம்ப நல்லாருக்கு...

//


என்ன பிரியா!நாம‌ இரவுத்திரம் பழகினது பயன்பட வேணாமா? நீங்களே ..... அப்பச் சரி!

கலகலப்ரியா said...

//

என்ன பிரியா!நாம‌ இரவுத்திரம் பழகினது பயன்பட வேணாமா? நீங்களே ..... அப்பச் சரி!//

ஐயையோ என்ன சொல்லுதீய... =))

கயல் said...

//
கலகலப்ரியா said...

//

என்ன பிரியா!நாம‌ இரவுத்திரம் பழகினது பயன்பட வேணாமா? நீங்களே ..... அப்பச் சரி!//

ஐயையோ என்ன சொல்லுதீய... =))

//


பாருடா பச்ச புள்ளையாட்டம்....

Unknown said...

Yes, nice presentation....all the best,keep going with this....

reagards

mohan friend(Arun)

கயல் said...

//
arun said...
Yes, nice presentation....all the best,keep going with this....

reagards

mohan friend(Arun)

//
நன்றி அருண்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!