Saturday, January 23, 2010

நா.முத்துக்குமார் கவிதை

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்.

12 comments:

கமலேஷ் said...

அட இவ்வளவு அருமையான கவிதையை ஏங்க தமிலிஸ்ல சப்மிட் பண்ணாம விட்டுடீங்க ஓ.கே நான் பண்ணிட்டேன்...

கயல் said...

சாமி! இது ந‌ம்ம‌ க‌டைச் ச‌ர‌க்கில்ல‌! லேபிளை பாருங்க‌! ச‌ரி ஆனது ஆக‌ட்டும் முத்துக்குமார் ம‌ன்னிப்பாராக‌!

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வுங்க.நன்றி.

கயல் said...

//
பா.ராஜாராம் said...
நல்ல பகிர்வுங்க.நன்றி.

//

வாங்க ராஜாராம்! நன்றி!

பழமைபேசி said...

//லேபிளை பாருங்க‌!//
தலைப்பு?

கமலேஷ் said...

அட என்ன தோழி இப்படி கேவலபடுத்தி புட்டீங்க... நா.முதுகுமார்ணா யாருன்னு தெரியாதா என்ன..நல்ல கவிதை யாரோடதா இருந்தா என்ன...நானும் தெளிவா முத்துகுமார் கவிதைன்னு சொல்லி தானே இணைத்திருக்கிறேன். நல்ல கவிதைகள மத்தவங்களோட பகிர்ந்துக்குனும்னு நினைக்கிற உங்க நல்ல மனதுக்கு...வாழ்த்துக்கள்..மற்றும் நன்றிகள்...

priyamudanprabu said...

நல்ல பகிர்வுங்க.நன்றி.

கயல் said...

கமலேஷ் said...
அட என்ன தோழி இப்படி கேவலபடுத்தி புட்டீங்க... நா.முதுகுமார்ணா யாருன்னு தெரியாதா என்ன..நல்ல கவிதை யாரோடதா இருந்தா என்ன...நானும் தெளிவா முத்துகுமார் கவிதைன்னு சொல்லி தானே இணைத்திருக்கிறேன். நல்ல கவிதைகள மத்தவங்களோட பகிர்ந்துக்குனும்னு நினைக்கிற உங்க நல்ல மனதுக்கு...வாழ்த்துக்கள்..மற்றும் நன்றிகள்...

//


அட ! என்ன கமலேஷ் இது? உங்கள போய் கேவலப் படுத்துவேனா? நா.முத்துக்குமார் படிக்காத கவிஞன் இருப்பானா? அந்த லேபிளுக்கு கீழே பகிர்ந்துக்கிற எதையும் தமிழிஷிலோ தமிழ்மணத்திலோ இணைப்பது வழக்கமில்லை என்பதால் அப்படி சொன்னேன்!மற்றபடி இது உங்கள் தளம் என்கிற மேலான அபிமானத்துக்கு என் வார்த்தைகளால் பங்கம் வந்திருந்தால் மன்னித்தருள்வீராக‌!

கயல் said...

//

பிரியமுடன் பிரபு said...
நல்ல பகிர்வுங்க.நன்றி.
//
நன்றி பிரபு!

கயல் said...

//
பழமைபேசி said...
//லேபிளை பாருங்க‌!//
தலைப்பு?
//
ம்ம்! முதலில் தவறு, மீண்டும் அதையே செய்ததால் தப்பு!
திருத்திக்கிறேன் ஆசானே!

ரிஷபன் said...

இந்த மாதிரி நல்லவர்கள் பெருகினா போதும்..

கயல் said...

//
ரிஷபன் said...
இந்த மாதிரி நல்லவர்கள் பெருகினா போதும்..

//

நன்றி ரிஷபன்! அடிக்கடி வாங்க!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!