Thursday, January 21, 2010

வ‌ழமை போல் இனியும்...

தோல்வித் தருணங்களில்
துணை தேடுகின்ற மனம்-‍அதுவே
நட்பாய் வாய்க்கையில்
குழந்தையாய் மாறி குதூகலிக்கிறது!

இயல்பாய் கிடைத்த
உறவுகள் பலதில்
நானே தேர்ந்த
நல்லுறவென்பதில்
கூடுதல் பற்றும் பரிவும்!

அம்மா அப்பா
அண்ணன் தம்பி
எத்தனை இருந்தும்
உண்மையில் உன்னிடம்
கிடைக்கும் ஆறுதல்
அவர்களின் புரிதலில்
இருக்குமா சந்தேகமே!

பலநூறு மைல்களுக்கப்பால்
மனைவி மக்களென நீ!
தொலைபேசியில் என் குரலை
வைத்தே நடப்பது என்ன
தீர்மானத்துக்கு வரும்
தீர்க்கதரிசி!

இது தப்பு அது தப்பு
குறை சொல்ல ஆயிரம்பேர்
ஆனால் கைபிடித்து
கரையேற்ற நீ மட்டும்!

எல்லோருக்கும் ஏதாவது
மனக்குறை உண்டு!
சேதத்தின் சதவீதமே
பலவீனம் பலமிரண்டையும்
பாங்காய் பகுக்கிறது!

கண்ணீர் மல்க
கடினமான கடந்தவை
பகிர்கின்றேன்!
விழித்திரை தாண்டியது
தான் தாமதம் அனிச்சையாய்
துடைக்கிறது உன் விரல்!
அரற்றி ஓய்ந்து
நிமிர்ந்து பார்க்கையில்
உன் கண்ணிலும் கண்ணீர்!
துடைக்கும் விரல்களின்றி!

அவ்வைக்கும் அதியனுக்கும்
நட்பிலக்கணம் நவில்வோர்
சமவயதான
ஆணுக்கும் பெண்ணுக்கும்
நடுவே
காதல் தாண்டி நட்பிருக்கும்
கருத்தை ஒரு மனதாக
ஏற்பதேயில்லை!

காதல் நலிந்து நண்பராய் பிரிவதும்
நட்பு திரிந்து காதலாய் தொடர்வதுமான
வழக்கங்கள் நவயுக நாகரிகமென்பதால்
தலைமுறை இடைவெளி
இதை ஆதரிப்பதேயில்லை!

எது எப்படியாயினும்
எனக்கு கவலையேயில்லை!
நம் நட்புக் குறித்த‌
அடுத்தவர் விமர்சனம்
அவசியமேயில்லை!
என் இதய சிம்மாசனத்தில்
நண்பனாய்
நல்லெண்ண விளக்கில்
ஒற்றைத் திரியாய்
ஆறுதல் தந்து மீட்டெடுக்கும்
ஆபத்துதவியாய்
எப்போதும் போல் இனியும் நீ!

11 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

சேதத்தின் சதவீதமே
பலவீனம் பலமிரண்டையும்
பாங்காய் பகுக்கிறது!//

கிளாசிக்கல் மியூசிக் கேட்கிறமாதிரியிருக்கு உங்க நட்பின் கதை நல்ல நண்பரை பெற்றிருக்கிறீர்கள் அல்லது நல்ல நட்பு உங்களை பெற்றிருக்கிறது...

சிறப்பான கவிதைங்க கவிதாயினி கயலு..

அண்ணாமலையான் said...

அருமை கயல்விழி சண்முகம். வாழ்த்துக்கள்....

கயல் said...

ந‌ன்றி வ‌ச‌ந்த்!உங்கள் புரிதல் உண்மை!!

கயல் said...

//
அண்ணாமலையான் said...
அருமை கயல்விழி சண்முகம். வாழ்த்துக்கள்....
//
ந‌ன்றி!!

sathishsangkavi.blogspot.com said...

//அம்மா அப்பா
அண்ணன் தம்பி
எத்தனை இருந்தும்
உண்மையில் உன்னிடம்
கிடைக்கும் ஆறுதல்
அவர்களின் புரிதலில்
இருக்குமா சந்தேகமே!//

நிச்சயம்...

கலக்கல் வரிகள்...

கமலேஷ் said...

அனைத்தும் அசத்தலான வரிகள்...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

பழமைபேசி said...

வாசித்தேன்... வாசித்தேன்....

cheena (சீனா) said...

அன்பின் கயல்விழி

அருமை அருமை - சிந்தனை எளிய சொற்கள் அனைத்துமே அருமை.

உன் கண்ணிலும் கண்ணீர்!
துடைக்கும் விரல்களின்றி!

நச்சுன்னு இருக்கு - சூப்பர்

கயல் said...

//
கமலேஷ் said...
அனைத்தும் அசத்தலான வரிகள்...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
//

வாங்க‌ க‌ம‌லேஷ்! ந‌ன்றி!!!

கயல் said...

//
பழமைபேசி said...
வாசித்தேன்... வாசித்தேன்....

//
ந‌ன்றி!!!

கயல் said...

//
cheena (சீனா) said...
அன்பின் கயல்விழி

அருமை அருமை - சிந்தனை எளிய சொற்கள் அனைத்துமே அருமை.

உன் கண்ணிலும் கண்ணீர்!
துடைக்கும் விரல்களின்றி!

நச்சுன்னு இருக்கு - சூப்பர்

//

ந‌ன்றி!!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!