Wednesday, January 6, 2010

கொலவெறி

"கொஞ்சம் யோசிச்சு பாரு தாயி"

"எல்லாம் ஒரு வார‌த்துக்கு முன்னாடியே, நின்னு -‍ நட‌ந்து - உங்காந்து - பேசி - சிரிச்சு - யோசிச்சாச்சு!"


"ஏந்தாயி!பெத்ததுக்காக ஆயி அப்பன் பொறுத்துக்கலாம்!ஆனா, மத்தவ‌ங்க‌....."


"என்ன மட்டும் சொல்லுறியே! 'அவங்க' யாராவது நிறுத்தினாங்களா? அவங்கள நிறுத்தச் சொல்! நானும் நிறுத்துறேன்! [நாயகன் :) சரீ சரீ] எத்தன தடவ எத்தன‌ பேர ஈவு இரக்கமே இல்லாம‌ கொன்னுருக்காங்க! உன்னப் போல யாராவது தட்டி கேட்டாங்களா? இல்லையே! கூட‌யிருக்க‌ நீயே இப்ப‌டி சொன்னா? நான் என்ன‌ ப‌ண்ணுவேன்!எனக்கு மட்டும் ஏன் இப்புடி எல்லாம் நடக்குது?[why me????:=( ]"

"என்ன‌ தான் ஆத்திர‌மிருந்தாலும் இப்புடி ஒரு முடிவ‌ நீ எடுப்பேன்னு நான் நெச‌மா நெனைக்க‌வேயில்ல‌!"

"என்ன‌ ப‌ண்ணுற‌து! நானுந்தான் நெனைக்க‌வேயில்ல‌! நெல‌ம அப்புடி! வேற‌ வ‌ழியில்ல‌!"

"இம்புட்டு நாளு எங்க‌ போன‌?பழய ஆளுங்க சரி! வெவரம் புரியாம யாராவது புதுசா வந்துட்டா? அவங்க என்ன பாவம் பண்ணுனாங்க?"

"முடியாது ! முடியாது! நான் சொன்னா சொன்ன‌து தான்! புது வ‌ருச‌த்த‌ன்னிக்கு கொல‌ தெய்வ‌த்துக்கு முன்னாடி ச‌ப‌த‌ம் போட்டுருக்கேன்!கூட‌வே இருந்த,அப்ப‌ விட்டுட்டு இப்ப‌ குதிக்குற‌?"

"நீ சொன்ன்துல்ல ஒன்னு கூட‌ உருப்புடுற‌ மாதிரி இல்ல‌! ச‌ரி ச‌மூக‌ கோப‌ம்(!)(ஹீ ஹி ஹி) கொஞ்ச‌ நேர‌த்துல கொற‌ஞ்சுரும்னு இருந்தேன்!ஆனா ..."

"ஆனா என்ன ஆவன்னா? க‌ல‌க‌ல‌ப்பிரியாலேர்ந்து கார்க்கி வ‌ரைக்கும் யாரு சொன்னாலும் கேட்க‌ மாட்டேன்! கேட்க‌ மாட்டேன்! கேட்க‌ மாட்டேன்!!!!" [யப்பே! இப்பவே கண்ணக் கட்டுதே! உஸ்ஸ்! என்ன‌ விள‌ம்ப‌ர‌முடா சாமி?]

"ப்பூ!தோபாருடா! அவங்கெல்லாம் ரொம்ப பெரியாளுங்க! நீ கத்தி எடுத்தது தெரிஞ்சாவே ஆள வச்சு தூக்கிருவாங்க! வலையுலகத்து மேல ரொம்ப அக்கற உள்ளவிங்க! சொன்னா கேளு பெரியாளுங்க‌ பொல்லாப்பு வேணாம்! வுட்டுரூரூரூ........"

"அப்புடீங்கிறியா?"

"ஆமா தாயி ! அப்புடித்தான் அப்புடித்தான்! கொஞ்சங்கொஞ்சமா எறங்கி வா! வா!"

"ச‌ரி! ச‌ரி! என்ன‌ய என்ன‌ தான் செய்ய‌ சொல்லுற‌?"

"நாளொரு பதிவுங்குறத வாரம் ஒரு பதிவுன்னு மாத்தினா போதும்! பல பேரு உசுரு தப்பிரும்! அத‌யும் ஞாயித்து கெழ‌ம‌ போட்டீன்னா ஒன‌க்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து! "

"ஏன்? ஏன்??? "

"ஒரு தொலை நோக்கு பார்வை தான்!இஃகி!"
[ஆயிர‌த்தோட‌ ஆயிர‌த்தொன்னாயிடும் பாருங்க‌! வெட்டோட‌ ஆழ‌ம் கொஞ்ச‌ம் க‌ம்மியா தான் ப‌டும்!தப்புச்சுருவா!]

"நீ ஏதோ சொல்லுறேன்னு தானே த‌விர‌ ப‌ய‌ங்கிய‌மெல்லாம் ஒண்ணுங்
கெடையாது!லேசா ஒத‌றுது!ப‌ட‌ப‌ட‌ப்பு அம்புட்டு தான் ச‌ரியாப்போயிரும்!"

"அப்பாடா! பதிவர்கள் தர்ம அடியிலயிருந்தும் கொலவெறியுல[கவனிக்க‌] இருந்தும் இவள காப்பாத்துறதுக்குள்ளேயும்!"

"எழுதுற‌துக்கு ச‌ர‌க்கு இல்லையின்னு எல்லாம் நென‌ச்சுக்காத‌! தெக்க‌த்தி பொண்ணு தெரியுமுல்ல‌!"

"ஏய்! உன‌க்கு அவ்வ‌ள‌வு தான் ம‌ரியாத‌! தூங்கு பேசாம‌! என்னா சின்ன‌ புள்ள‌ த‌ன‌ம்!@#$%^&*"

"சாமிக் குத்த‌மாகாது?"

"எழுதினாத்தான் சாமி வந்து குத்தும்!"

"யாரு சொன்னா?"

"சாமி தான்!"

"சாமியே சொல்லிட்டா......ரா......?அப்பச் சரி!!"

பங்கேற்றோர் : கயல் மற்றும் கயலின் மனசாட்சி

குறிப்பு :‍-
பிரியா & கார்க்கி! ஒரு வீராவேசத்துல உங்களயும் இழுத்துட்டேன்! மன்னிச்சிடுங்க!

4 comments:

கலகலப்ரியா said...

label sarithaan thaayeeeeeee...

கலகலப்ரியா said...

கொக்கமக்கா... இப்டி எல்லாம் ஆரம்பிச்சாச்சா... நடக்கட்டு நடக்கட்டு.... =))...

கயல் said...

இஃகி! இஃகி!

//
கொக்கமக்கா... இப்டி எல்லாம் ஆரம்பிச்சாச்சா... நடக்கட்டு நடக்கட்டு.... =))...
//

ஆமா! ஆமா!

//

கலகலப்ரியா said...
label sarithaan thaayeeeeeee...

//

த‌ல‌வீ சொன்னா ச‌ரிதானுங்க‌!

இப்போ நான் திருந்திட்டேன்!

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
:))

January 5, 2010 1:41 PM
//

பாருடா சிரிக்கிற‌த!
அம்புட்டு கொடுமைய எதிர்பாத்தாங்களோ?
ம்ம்! ந‌ம்ம‌ ப‌ல‌ம் ந‌ம்க்கே தெரிய‌ல‌!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!