Friday, January 1, 2010

ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு!

வணக்க‌முங்க! நெம்ப நாளாச்சா இடுகை எழுதி அதேன் ஒரு வாட்டி எழுதி பாக்கலாமுன்னு! ஆர்வக் கோளாறு! இப்ப மட்டும் மன்னிச்சுக்கோங்க மக்கா! (இல்லையினா மட்டும்) திட்டுறது கேக்குது! விடுங்கப்பா அரசியல்ல இதெல்லாம் சகசமுங்க! தலைப்ப பாருங்க இப்போ திருப்தியா?


பக்கம் 1:

உன் பெண்மையின்
வைராக்கியத்தை கொஞ்சம்
உன் கண்களுக்கும்
சொல்லிக் கொடு!

உன்னை விட்டுப் பிரிகையில்
உன் உதட்டுக்கும் கண்ணுக்கும்
செய்கை அலைவரிசை
ஒத்துப் போவதே இல்லை!

பட படக்கும் இமைகளில்
பரிதவிக்கிறதடி
எனக்கான உன் காதல்!


*******

பக்கம் 2:

உறவுகள் ஒவ்வாமை
அயர்ச்சியில் துவல்கிறேன்
ஆதரவான நண்பன் நீ!
காதலெனும் வேண்டுதலோடு!

********

பக்கம் 3:

சருமத்தில் மினுமினுப்பு
கண்களில் ஒளிவெள்ளம்
இதழோர புன்னகை!
இப்படியாக
காதலின் பரிமாணங்கள்
ஆடியில் பிம்பமாய்...
காதலன் முகம் தவிர!

********

பக்கம் 4:

அலையும் வ‌ரை அலையவிடு
எங்கே போய்விடும்
அலைந்து விட்டு திரும்பி வரும்
காதல் கொண்ட மனம்!

*******

பக்கம் 5:

சொல்லால் சாதிக்கப்படாததெல்லாம்
காதலி கண்ணால் சாதிக்கப்படும்
காதல் அகராதியில்!

*******

பக்கம் 6:

செத்துவிடலாம் என்றிருக்கிறேன்
எக்காளமிடுகிறது மன‌ம்
காதல் வந்தபின்
சாவதில் இது எத்தனையாவது முறை?

*******

பக்கம் 7 :

சுளிப்பும் பழிப்பும்
சுற்றம் தந்த வெறுப்பும்
கதறி ஓய்ந்த கண்களும்
சீதனமாய் தாங்கி
மணமக்கள்
நிறைவேறிய காதலாம்!

*******

பக்கம் 8:

கனவு வரம் தந்த
தேவதை நீயெனக்கு!
வாழ்க்கை தந்து ஏன்
வரங்களை சாபமாக்கினாய்?
தேவதையாகவே இருந்திருக்கலாம்!

*******

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

4 comments:

கலகலப்ரியா said...

arumai kayal..! :) happy new year..!

ப்ரியமுடன் வசந்த் said...

காதல் வந்தபின் சாவதில் இது எத்தனையாவது முறை இந்த வரிகள் நெம்ப நல்லாருக்குங்க...!

கயல் said...

//

கலகலப்ரியா said...

arumai kayal..! :) happy new year..!

//

வாங்க பிரியா! நன்றி!

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...

காதல் வந்தபின் சாவதில் இது எத்தனையாவது முறை இந்த வரிகள் நெம்ப நல்லாருக்குங்க...!
//
நன்றி வசந்த்!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!