Saturday, April 11, 2015

குறுங்கவிதை

மித்தைகள்
மினுங்கும் 
மிதவையுள்
மாயை 
முத்தீ
மாழை
மயங்கும்
மந்திரக் களி
மணம்

*****


கின்னரத் தும்மலில் 
முயலொன்று பயந்து
எறும்பின் சாரை
சிதைத்து விரவியதில்
பற்றிக் கொண்டது காடு....
தீயோவென்று பதறிய மேகங்கள்
மழை பொழியும் போது
ஏகுமிடமற்ற எறும்புகள்
என்னவாகும்?????
*******

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!