Saturday, April 11, 2015

தான்தோன்றி

சுழலும் மின்விசிறியை பார்த்தபடி நான்கு சுவர்களுக்குள்ளான வாழ்க்கை.
முடக்கி போடுபவர்களை எதிர்த்து ஏதும் செய்யாது முடங்கிப் போனேன் என்பதே வலியாக இருக்கிறது.
பிரச்சினைகள் தலைவிரித்து ஆடும் போது எப்படி கொட்டாவியுடன் தூக்கம் வருகிறதுனக்கு என்கிற தோழியின் கேள்விக்கு குழறலாய் பதில் சொல்லி தூங்கிப் போகிறேன்.
எவர் அக்கறையும் பிடிப்பதில்லை.
எவர் உதவியும் சமயத்தில் கிடைக்காத காரணத்தாலே எவரிடமும் எதிர்பார்ப்பில்லை இப்போதெல்லாம்.
சில நேரம் என்போலான எந்திரங்கள் இப்படித் தான் பழுதாகும்.
மீண்டு வர என்ன வழி?
பிடித்த விசயங்களைத் தேடிப் பிடித்து படிப்பதும் சமைத்து ருசிப்பதும் பிழைப்புக்கென எல்லா சாத்தியங்களையும் கண்டடைவதும் இப்போதெல்லாம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறேன்.
சரி செய்து மீண்டும் பிழைப்புக்கென முடுக்கிவிடும் மிகப் பெரிய பொறுப்பும் என்னிடமே வரும்.
ம்ம்...
தான்தோன்றிப் பெண்.
இந்த சொலொன்று தைத்து தான் இத்தனை தூரம் வந்திருக்கிறேன்.
தான்தோன்றிகளை சுயம்பென்று கொண்டாடுங்கள். பழிக்காதீர்கள்.
எங்களைப் போன்ற எவருமற்றவர்கள் தான் சுயசார்புடைய
தன்னம்பிக்கை பெண்கள்.

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!